உலகக்கோப்பை கிரிக்கெட்: ரோஹித் அபார சதம், 300ஐ ஸ்கோர் தாண்டும் என கணிப்பு
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை பாகிஸ்தான், தேர்வு செய்ததால் இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தவானுக்கு காயம் என்பதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். கே.எல்.ராகுல் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி 85 பந்துகளில் சதமடித்து அசத்தினார்
இந்திய அணி சற்றுமுன் வரை 32 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளதால் இந்தியாவின் மொத்த ஸ்கோர் 300ஐ தாண்டும் என கணிக்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.