நேற்றைய உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணியை பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் பிரேசில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரில் நேற்று கேமரூன் அணி பிரேசில் அணியை எதிர்த்து விளையாடியது. பிரேசில் அணி தனது முதல் கோலை ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் போட்டு, தனது வெற்றிக்கணக்கை தொடக்கியது.
இந்த கோலுக்கு பதிலடியாக கேமரூன் வீரர் மேடிப் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இருப்பினும் இரண்டாவது பாதியில் பிரேசில் அணியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அடுத்தடுத்து மூன்று கோல்களை பிரேசில் அணியினர் போட்டனர். அதற்கு பதிலடி கொடுக்க கேமரூன் எவ்வளவோ முயற்சி செய்தும் பிரேசில் கோல்கீப்பரின் அபாரமான தடுப்பாட்டத்தால் கேமரூன் அணியினர் திண்டாடினர். இறுதியில் 4-1 என்ற கோல்கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.