உரி தாக்குதல். பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
கடந்த 18ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் காஷ்மீர் யூரி தாக்குதலில் ஏற்கனவே 18 பேர் பலியாகி இந்தியாவையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த தாக்குதலில் காயமடைந்த மற்றொரு வீரர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணம் அடைந்ததால் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
பலியான ராணுவ வீரர், புதுடெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சையில் பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மேலும் 22 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.