உயிருக்கு போராடிய அண்ணனை செங்கல் வண்டியில் வைத்து தள்ளி கொண்டு சென்ற தங்கை!

உயிரை காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் இருக்கின்றது, ஆனால் எல்லா நேரங்களிலும் குறிப்பாக ஏழை எளியவர்களுக்கு இந்த வசதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறி

அந்த வகையில் புதுவையில் உயிருக்காக போராடிய ஒருவரை காப்பாற்ற அவருடைய தங்கை ஆம்புலன்ஸ் கிடைக்காததால் செங்கல் கொண்டு செல்லும் தள்ளுவண்டியில் வைத்து தானே தள்ளிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ் தான் வரவில்லை என்றால் இதனை பார்த்த எந்த பொதுமக்களும் அந்த பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பதிவு செய்து லைக்ஸ்கள் பெற்றார்கள்.

Leave a Reply