shadow

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகமாட்டாரா? மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னையில் விதிமீறல் கட்டட வழக்கில் இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் மாநகராட்சி ஆணையர் இன்று ஆஜராகவில்லை.

இந்த நிலையில் நாளை கட்டாயம் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநகராட்சி ஆஜராகமாட்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மாநகராட்சி ஆணையர் வேறுபணிகள் காரணமாக வெளியூர் சென்றதால் ஆஜராக இயலவில்லை என மாநகராட்சி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது

Leave a Reply