பெரும் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் விகாஸ் துபேவை கைது செய்ய முயன்ற போது டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் ரவுடிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் விகாஸ் துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி நகரில் நேற்று பிடிபட்டார். விகாஸ் துபேவை உபி மாநிலத்திற்கு அழைத்து வரும் போது போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது-
இந்த விபத்தை பயன்படுத்தி போலீசாரின் துப்பாக்கியை பறித்து, விகாஸ் துபே சுட முயற்சித்தார். இதனையடுத்து தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் விகாஸ் துபே கொல்லப்பட்டதாக தகவல் வெளியானாலும் இன்னும் போலீசார் விகாஸ் துபேவின் மரணத்தை உறுதி செய்யவில்லை
Leave a Reply
You must be logged in to post a comment.