shadow

உபியில் மாயாவதி-அகிலேஷ் கூட்டணிக்கு சிக்கல்!

பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை இணைக்காமல் உபி மாநிலத்தில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. இதனால் இரு தேசிய கட்சிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் தற்போது இந்த கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வேலை செய்து வந்த அகிலேஷ் கட்சியினர், அந்த தொகுதிகள் மாயாவதி கட்சிக்கு சென்றுவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்

இந்த அதிருப்தியாளர்களை காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் வலைபோட்டு இழுத்து வருவதால் அகிலேஷ் கட்சியின் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டு அறிவிப்பை நிறுத்தி வைத்ததுடன் வேட்பாளர் தேர்வையும் ஒத்து வைத்துள்ளது. இந்த கூட்டணியை உடைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலையில் உள்ள பாஜக, காங்கிரஸ் தங்கள் பகைமையை மறந்து இந்த வேலையை சரியாக செய்து வருகின்றன

Leave a Reply