உதயநிதியை முன்னிலை படுத்தும் திமுக: தொண்டர்கள் அதிருப்தி
கடந்த 4-ம் தேதி தஞ்சாவூரில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் உதயநிதியின் படமும் இடம்பெற்றிருந்தது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் தன்னை திமுகவின் தொண்டர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் உதயநிதியை மிகக் கடுமையாக சாடியுள்ளார். மூத்த தலைவர்கள் மேடையில் இருக்க பேனரில் உங்கள் புகைப்படம் வர என்ன தகுதி இருக்கிறது? என காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா?
உங்களுக்கு தோணலையா? முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?” இதுதான் சாமுராய் என்ற பெயரில் பதிவாகியுள்ள டுவீட்
இந்த கேள்விக்குக் அதே டுவிட்டரில் உதயநிதி பதிலளித்திருக்கிறார். “தவறு! மீண்டும் நடக்காது!” என வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இருந்தாலும் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்று தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.