உடைகிறது மக்கள் நலக்கூட்டணி. காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி?
மக்கள் நலக்கூட்டணி கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதன் முதலமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணி கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது.
தேமுதிகவும், தமாகவும் கிட்டத்தட்ட மக்கள் நலக்கூட்டணியை மறந்தே போய்விட்டது. அடுத்ததாக இந்த கூட்டணியின் முக்கிய தலைவரான திருமாவளவனும் சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை சந்தித்து பேசியதாகவும் விரைவில் புதிய கூட்டணி அமையும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் திமுக ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்ற போதிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெறும் எட்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது. இதற்கு திமுக சரியான ஒத்துழைப்பை தரவில்லை என்றே காங்கிரஸார் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. எனவே வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் விடுதலைச்சிறுத்தை கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கூட்டணி நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.