உடல்நிலை வதந்திக்கு பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று முன் தினம் இரவு உடல்நலக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வதந்தியை முறியடிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு நிகழ்ச்சியில் சுறுசுறுப்பாக கலந்து கொண்டார்.
சென்னையில் தயா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், கஜா புயலில் உயரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
தயா அறக்கட்டளை லதா ரஜினிகாந்தின் குழந்தைகளுக்கான அறக்கட்டளை என்பது குறிப்பிடத்தக்கது,
Leave a Reply
You must be logged in to post a comment.