உங்கள் தந்தையாலேயே முடியாதது உங்களால் முடியுமா? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘மு.க.ஸ்டாலின் அதிமுக காணாமல் போகும் என்கிறார். உங்கள் தந்தையாலேயே முடியாதது உங்களால் முடியுமா. சுனாமி வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

எதிர்கால சந்ததியிருக்கான அடிப்படை தேவைகளை செய்து காட்டியது ஜெயலலிதா அரசு. தனிநபர் வருமானம் உயர உழைத்தது ஜெயலலிதா அரசு. 6 லட்சம் காங்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 15 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் 4 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்க்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்றியது ஜெயலலிதா அரசு.

ஜல்லிகட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு. திமுக ஆட்சியில் ஜாதி சண்டை மதக்கலவரங்கள் அதிகம். மு.க.ஸ்டாலின் அதிமுக காணாமல் போகும் என்கிறார். உங்கள் தந்தையாலேயே முடியாதது உங்களால் முடியுமா. சுனாமி வந்தாலும் முடியாது. புயல் வந்தாலும் முடியாது. ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. ஸ்டாலினுக்கு முதல்வராக வேண்டும் என்று பேராசை.

எனவே ஜோசியர்கள் சொல்வதை கேட்டு விதவிதமாக கலர் சர்ட் போட்டு வருகிறார். தேநீர் கடைகளில் தேநீர் குடிக்கிறார். நான் தேநீர் கடையையே வைத்தவன். திமுக ஆட்சியில் வன்முறை கலாச்சாரம், மற்றவர் சொத்தை அபகரிப்பது போன்ற வன்முறைகள் தான் நடந்தன. மேலிருந்து தெய்வமாக ஜெயலலிதா பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே அவரது திட்டத்தை இன்னும் கூடுதலாக செயல்படுத்தி வருகிறோம்.

மலைப்பிரதேச மக்களின் இன்னல்களை நான் அறிவேன். கொடைக்கானலில் 10 ஆண்டுகாலமாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவன். கூடலூரில் உள்ள செக்சன் 17 நிலப்பிரச்சினைக்கு தீர்வு, ஈழுவ தீயர் மக்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலி்ல் சேர்க்க நடவடிக்கை, நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றப்படும்

இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

Leave a Reply