ஈரோட்டுக்காரருக்கு தேனியில் என்ன வேலை? அமைச்சர் செல்லூர் ராஜூ

ஈரோட்டில் பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியில் மக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறார்? என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியினர்களே பலர் ஆச்சரியம் தெரிவித்தனர். இந்த தொகுதிக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாதவர் எப்படி வேட்பாளரானார் என்பதே பலருக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது

இந்த நிலையில் இன்று தேனி தொகுதியில் துணை முதல்வர் மகன் ரவீந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியலில் தரமும், தராதரமும் இல்லாதவர் என்று கூறினார். மேலும் ஈரோட்டில் பிறந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியில் மக்களுக்காக என்ன செய்துவிடப் போகிறார்? என்றும் கேள்வி எழுப்பினார்

மேலும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் அதிமுக பற்றி பொய்ப் பரப்புரை செய்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply