ஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று மாலை முக்கிய ஆலோசனை: விஜய்பாஸ்கர் விவகாரமா?
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் பதவி விலக வேண்டும் என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் உள்கட்சி விவகாரம் மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து இன்று ஈபிஎஸ்-ஓபிஸ் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.