இஷாந்த் 9, உமேஷ் யாதவ் 8: வங்கதேசத்தை தவிடுபொடியாக்கிய பந்துவீச்சாளர்கள்

நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு இன்னிங்சிலும் வங்கதேச அணியின் 17 விக்கெட்டுகள் இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளனர்

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி மொத்தம் ஒன்பது வங்கதேச விக்கெட்டுகளை வீழ்த்தினார்

அதேபோல் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ்யாதவ் இந்த போட்டியில் தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

இருவரும் சேர்ந்து வங்கதேசத்தின் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றி உதவியுள்ளனர்

முதல் இன்னிங்சில் இந்திய எடுத்த 347 ரன்களை இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து வங்கதேச அணி அடைக்க முடியாததால் அந்த அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது

இந்தியா வங்கதேச அணி இடையே நடைபெறும் முதல் பகல் இரவு போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று சாதனை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த போட்டியில் விராத் கோலி மிக அபாரமாக விளையாடி சதம் எடுத்த போதிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply