இவர்தான் ‘காப்பானா?: சூர்யா ரசிகர்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள சூர்யா ரசிகர்கள் ’காப்பான்’திரைப்படம் வெளியானதை அடுத்து சாலைகளில் பேண்டு வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்றுள்ளனர். இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவர்களை புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, முன் அனுமதி வாங்காமல் இதுபோன்று ஊர்வலம் செல்லக் கூடாது என எச்சரித்தார். மேலும் இனிமேல் அவ்வாறு செய்யமாட்டோம் என கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

சூர்யாவின் ரசிகர்கள் எழுதிய மன்னிப்பு கடிதத்தை படித்த காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அதிர்ச்சி அடைந்தார். கல்லூரியில் படிக்கும் அந்த இளைஞர்கள் ஒரு மன்னிப்பு கடிதத்தை கூட தமிழில் பிழையில்லாமல் எழுத தெரியவில்லை. இந்தகடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் ‘தமிழை இதுபோன்ற ஆட்களை வைத்து கொண்டு எப்பது ‘காப்பது? என நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.

Leave a Reply