shadow

இளைஞரை நடுரோட்டில் அடித்தாரா சூர்யா? பரபரப்பு தகவல்

surya1சென்னை அடையாறு அருகே பெண் ஒருவர் ஓட்டி சென்ற காரின் பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த கால்பந்தாட்ட வீரர் பிரேம்குமார் என்வர் பின்புறமாக மோதியதால் சிறிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரின் பின்புறமும், மோட்டார் சைக்கிளின் முன்புறமும் சேதம் அடைந்தது.

இதனையடுத்து காரை ஒட்டி வந்த பெண்ணிற்கும் பிரேம்குமாருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த நடிகர் சூர்யா இருவரையும் சமாதானம் செய்ததாகவும் ஒரு கட்டத்தில் சூர்யாவுக்கும் பிரேம்குமாருக்கும் கடும் வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னை அடித்ததாக பிரேம்குமார் அடையாறு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.  இந்நிலையில் சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சூர்யா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சூர்யா கூறியதாவது:

சென்னை அடையாறு அருகே காரில் சென்ற பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டதாகவும், அந்த இளைஞர்களிடம் இருந்து பெண்ணை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின்போது இளைஞர்களை தான் தாக்கவில்லை என்றும், கூட்டம் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும் சூர்யா விளக்கியுள்ளார்.

Leave a Reply