shadow

இளம்பெண் பலாத்காரம்: வாயை மூட ரூ.2.5 கொடுத்ததாக எம்பி மீது புகார்

மேற்குவங்க மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை எம்பி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, விரைவில் திருமணம் செய்து கொள்கிறேன், அதுவரை அமைதியாக இரு என்று கூறி ரூ.2.5 லட்சம் அந்த பெண்ணுக்கு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ரிட்டாபிராட்டா பானர்ஜி. இவர் பாலூர்காட் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்ததாகவும், அதன்பின்னர் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கூறி அவருடைய வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சம் டெபாசிட் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது டுவிட்டரில் பதிவு செய்து அதை மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோர்களுக்கு டுவிட்டர் மூலம் தனது குற்றச்சாட்டை அனுப்பியுள்ளார். தனது வாழ்வை சீரழித்த எம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பிரதமர் நரேந்திரமோடிக்கும் புகார் அனுப்பியுள்ளார். இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply