இலங்கை பரிதாப தோல்வி: அரையிறுதிக்கு செல்லுமா?

நேற்று நடைபெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட அந்த அணி இழந்துள்ளது

நேற்றைய போட்டியில் 204 என்ற எளிய இலக்கை மட்டுமே தென்னாபிரிக்காவுக்கு இலங்கை கொடுத்தது. இந்த இலக்கை தென்னாபிரிக்கா அணி 37.2 ஓவர்களில் அடித்துவிட்டது. டூபிளஸ்சிஸ் 96 ரன்களும், ஆம்லா 80 ரன்களும் எடுத்து அபாரமாக விளையாடி தென்னாபிரிக்கா அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

தென்னாப்பிரிக்கா இந்த வெற்றி இந்த தொடரில் கிடைத்த இரண்டாவது வெற்றி என்பதும் அரையிறுதிக்கு செல்ல முடியாவிட்டாலும் இதுவொரு ஆறுதல் வெற்றியாக அந்த அணிக்கு அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply