இலங்கை அதிபர் தேர்தல்! கோத்தபயா அதிபர் பதவிக்கு போட்டியா?

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவாரா? என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளிவரவில்லை

இந்த நிலையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கோத்தபாய ராஜபக்சே அதிபர் வேட்பாளராக களம் இறங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை மகிந்தா ராஜபக்சே விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

சமீபத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்கள் சிறிசேனா மீது அதிருப்தியில் இருப்பதால் கோத்தபயா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply