இலங்கையில் 10-வது குண்டுவெடிப்பு

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று வெடித்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தால் அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் உள்பட 320 பேர் பரிதாபமாக பலியான நிலையில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்து வருவதால் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகே பைக்கில் கண்டெடுக்கப்பட்ட குண்டு ஒன்று திடீரென வெடித்தது

இலங்கையில் அடுத்தடுத்து வெடிகுண்டு சிக்குவதால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும் என இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாத குழுவின் தலைவர் தற்கொலைப்படையாய் செயல்பட்டுள்ளதாகவும், அந்த தற்கொலைப்படை தலைவன் இலங்கையில் சாங்கரி லா ஓட்டல் தாக்குதலில் பலியாகியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply