shadow

இலங்கைக்கு பதிலடி: 25 இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர படை

தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினர்களால் கைது செய்யப்படுவது கடந்த பல வருடங்களாக வாடிக்கையாகிவிட்ட நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் இன்று 25 இலங்கை மீனவர்கள் இந்திய படையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைக்கால் அருகே இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேர் 5 மீன்பிடி படகுகளுடன் காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் மீன்பிடித்ததால் இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.

Leave a Reply