இறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த இளைஞர்
அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டு 20 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் உயிர்பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.
மிச்சிகனின் லிவோனியாவைச் சேர்ந்த 20 வயதான மைக்கேல் ட்ரூட் என்ற இளைஞர், இரும்பு ஏணியில் ஏறும் போது மேலே சென்ற மின்சார வயர் பட்டதில் ஷாக் அடித்தது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் உயிருக்குப் போராடிய மைக்கேல், சிகிச்சை பலனின்றி இதயம் செயல்பாட்டை இழந்து நின்று போனதாக மருத்துவர்கள் கூறினர். இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து உயிர் காக்கும் கருவிகளை அகற்றினர்.
இந்நிலையில் 20 நிமிடங்களுக்குப் பின் திடீரென மைக்கேலுக்கு இதயத்தில் துடிப்பு வந்தது. அப்போது அவர் படுக்கவைக்கப்பட்டிருந்த கட்டிலும் குலுங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதிசயமாக மைக்கேலின், இதயம், மூளை செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஷாக் அடித்த பாதிப்பில் பாதங்கள் தான் மறத்துப் போயிருந்ததாகவும் கூறினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.