இர்மா புயல் எதிரொலி: காணாமல் போன கடல்
ஒரு புயல் வந்தால் ஒரு ஊரே காலியாகும் என்று தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் சமீபத்தில் கோரத்தாண்டவம் ஆடிய இர்மா புயல் காரணமாக ஒரு கடலே காணாமல் போயுள்ளது.
அமெரிக்காவையே நிலைகுலைய செய்த இர்மா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் சரியான தகவல்கள் வெளிவராத நிலையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரபரப்பாக வலம் வருகிறது.
இந்த வீடியோவில் பஹாமா பகுதியில் உள்ள கடலில் சுத்தமாக தண்ணீர் இல்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மணல் தான் உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இருந்த கடல் திடீரென காணாமல் போயுள்ளதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,.
//www.youtube.com/watch?v=yFVrGvO0cfc
Leave a Reply
You must be logged in to post a comment.