shadow

இரும்பு மனிதரின் சிலை குறித்து தமிழிசையின் டுவீட்

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய் பட்டேல் சிலை நேற்று பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலை குறித்து பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கூறியதாவது:

இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை திறப்பை விமர்சிக்கும் தலைவர் திருமாவளவன் உ.பி பகுஜன் சமாஜ் முதல்வர் மாயாவதி திறந்த யானை சின்னங்களான சிலைகளை என்றாவது விமர்சித்தாரா?

தலைநிமிர வைக்கும் சிலை. இந்தியாவை சிதைந்து போகாமல் காத்த இரும்பு மனிதருக்கு சிலை. அதன் அருமை தேச பக்தர்களான நம் நாட்டு மக்களுக்கு தெரியும் அதனை உலகறிய செய்வது நம் வரலாற்று கடமை.

Leave a Reply