இரண்டாக பிரிக்கப்பட்ட திமுக: தொண்டர்கள் அதிர்ச்சி

கோவை மாநகர் மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 2ஆக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளதை அடுத்து கோவை திமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 57 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் கோவை மாநகர் மாவட்ட திமுகவில் மேலும் 14 வார்டுகள் சேர்க்கப்பட்டு கோவை மாநகர் கிழக்கு மாவட்டமாக அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பொறுப்பாளராக நா.கார்த்திக் எம்.எல்.ஏ. நீடிப்பார் எனவும், 29 வார்டுகளை கொண்டு புதிதாக பிரிக்கப்பட்ட கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக மு. முத்துசாமி நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே செயல்படும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக சி.இராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் தொடர்ந்து செயல்படுவர். இவ்வாறு அந்த அறிக்கையில் குரிப்பிடப்பட்டுள்ளது

Leave a Reply