இரண்டாக பிரிக்கப்படுகிறதா அண்ணா பல்கலைக்கழகம்? அதிர்ச்சியில் மாணவர்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் எனத் தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அப்பல்கலையில் படித்து வரும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

அண்ணா பல்கலைகழகத்தில் படிப்பது என்பதை தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாணவர்கள் அனைவரும் பெருமையாக கருதப்பட்டு வரும் நிலையில் நிர்வாக வசதிக்காக அண்ணா பல்கலை இரண்டாக பிரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக ஒரு செய்தி வெளியாகி வந்தது

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் கூடிய அமைச்சரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுமை காப்போம்

Leave a Reply