shadow

இரட்டை இலை விவகாரம்: தீபா எடுத்த திடீர் முடிவு

அதிமுக கட்சியும் இரட்டை இலை சின்னமும் தனக்கே ஒதுக்க வேண்டும் என்றும் தனது தலைமையில் இருப்பதுதான் உண்மையான அதிமுக என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் இருந்து மனுக்களை வாபஸ் தீபா திடீரென வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை தீபா பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பசும்பொன் பாண்டியன் டெல்லியில் இன்று உறுதி செய்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் குறித்த இறுதி விசாரணை இன்று நடைபெறும் நிலையில் தீபா தனது மனுவை வாபஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply