இப்படி ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்கள்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளி எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள நிலையில் அந்த பள்ளியில் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் பாம்ஹோரி பிகா என்ற மாவட்டத்தில் மேலே உள்ள படத்தில் தோன்றும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேல்பகுதியில் பொருத்தப்பட்ட ஓடுகள் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலை உள்ளது

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கல்வித்துறைக்கு புகைப்படத்துடன் தகவல் அனுப்பிய நிலையில் ஆபத்தான வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற குறிப்பு மட்டும் கல்வித்துறையில் இருந்து வந்துள்ளதாம். மின்விசிறி, தண்ணீர் உள்பட இங்குள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply