இன்விடேஷனில் அமுல்யா பெயர் நீக்கம்: பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரில் சமீபத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒவைசி எம்பி பேசி கொண்டிருந்தபோது திடீரென இளம்பெண் அமுல்யா மைக்கை பிடித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி திப்பு சுல்தான் கார்டனில் நடைபெறவிருக்கும் சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த இன்விடேஷனில் அமுல்யா பெயர் இருந்ததால் தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டு புதிய இன்விடேஷன் அடிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் இனி நடத்தப்படும் எந்த போராட்டத்திலும் அமுல்யா கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply