shadow

கொரோனா வைரஸ் பாதிப்புகாக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உதவி செய்யும் வகையில் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தமிழக அரசு நிதி வழங்கி வருகின்றனர்

இந்த நிலையில் இன்று வரையில் தமிழகத்திற்கு 181 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளதாகவும் நிதி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இன்று வரையில் #Donate2TNCMPRF ரூ.181 கோடி வழங்கியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி!

நான் உறுதியளித்தபடி தகவல் அனைத்தும் பொதுவெளியில் உள்ளது.

மருந்துகள்- ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் RTPCR கிட்கள் வாங்கிட ரூ. 50 கோடி ஒதுக்கப்படுகிறது.