shadow

இன்று முதல் பிளஸ் 1 பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு புதிய அனுபவம்

இதுவரை 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு உண்டு என அறிவிக்கப்பட்டது.

இதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ-மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். திருநங்கை ஒருவர் உட்பட 5,032 தனித்தேர்வர்கள், 78 ஆண் கைதிகளும் இந்த தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் பிளஸ் 1 பொதுத்தேர்வு இம்மாதம் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply