இன்று முதல் ஒருவாரம் போராட்டம் நடத்த தடை: அதிரடி உத்தரவால் பரபரப்பு
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டம் நடந்து வருவதும் ஒருசில போராட்டங்களில் வன்முறை வெடித்து உயிர்ப்பலி ஆகியுள்ளதும் தெரிந்ததே.
இந்த நிலையில் விராலிமலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி செல்வராஜ், இலுப்பூர் கோட்டாச்சியர் ஜெயபாரதி அகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த சில தினங்களாக திமுகவினர் கைது செய்யப்ட்டு வருகின்றனர். இதனை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தவிருந்த நிலையில் காவல்துறை இந்த அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.