shadow

இன்று மீண்டும் பிரதமர் பதவியை ஏற்கின்றாரா ரணில்?

இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்ப நிலை நிலவி வருகிறது. இரண்டு பிரதமர்கள், இரண்டு சபாநாயகர்கள் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் கூடிய நாடாளுமன்ற கூட்டத்தில் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அல்லது நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க வாய்ப்புள்ளதாக இலங்கையின் முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதால் அவர் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதில் பிரச்சனை இருக்காது என்றே கூறப்படுகிறது.

Leave a Reply