இன்று மனுதாக்கல் செய்த அரசியல் பிரபலங்கள்
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் தொடங்கி மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றுதான் அரசியல் கட்சி பிரபலங்கள் மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியனிடம் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
அதேபோல் தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று மதுரை ஆட்சியரிடம் நடராஜனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
மேலும் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேனி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்
புதுச்சேரி மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.