இன்று பாரத் பந்த்: பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பெட்ரோல் – டீசலுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.
இதனால் சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் வர்த்தகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து நடைபெறும் பாரத் பந்தை முன்னிட்டு பெங்களூருவில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.