இன்று நேற்று நாளை 2′ படத்தின் நாயகன் யார் தெரியுமா?
இயக்குனர் ரவிகுமார் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் நாயகன் குறித்த தகவலை தயாரிப்பாளர் சிவி குமார் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்று நேற்று நாளை 2′ படத்தின் ஹீரோவாக முதல் பாகத்தில் நடித்த விஷ்ணுவிஷால் நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த கருணாகரன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்றும் சிவி குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தை இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.