ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது

இன்னும் நான்கு போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் நான்கையும் நல்ல ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு நூலிழை வாய்ப்பு உள்ளது
அந்த வாய்ப்பை இன்று சென்னை பயன்படுத்த வேண்டும் என்றே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் ஏற்கனவே மும்பையுடன் நடந்த முதல் போட்டியில் மோதி வெற்றி பெற்ற சென்னை அணி அதே உற்சாகத்தில் இன்றும் மும்பையுடன் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

நேற்று ஐதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளதால் சென்னைக்கு இன்னும் ஒரு நூலிழை வாய்ப்பு இருப்பதாகவும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர்களை களமிறக்க வேண்டும் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply