இன்றும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை: முழு விபரங்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே
நேற்று 9 மாவட்டங்களுக்கும் புதுவைக்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை குறித்த அறிவிப்பை பார்த்து வந்த நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் தொடர் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது


தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

அதேபோல் கனமழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்

மேலும் அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply