நாளை முதல் மதுரையில் எப்படி?

மதுரையில் நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதால் நாளை முதல் வழக்கமான ஊரடங்கு அமலுக்கு வருகிறது

நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்தாலும் இனிமேலும் முழு ஊரடங்கை அமல்படுத்தி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்க மாவட்ட நிர்வாகம் விரும்பவில்லை

எனவே மதுரை மக்கள் நாளை முதல் கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கையை தொடங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply