shadow

இன்னும் சற்று நேரத்தில் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர்களை சமீபத்தில் சபாநாயகர் தனபால் பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் சேர்த்து விசாரணை செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்னும் சில நிமிடங்களில் விசாரணை தொடங்கவுள்ளது.

இந்த வழக்கில் 18 எம்.எல்.ஏக்களுக்காக பிரபல வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் அவர்களும், ஸ்டாலின் தரப்பில் கபில்சிபல் அவர்களும் வாதாடுகின்றனர். இவர்கள் இருவரும் சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட்டுக்கு வருகை தந்துள்ளனர். பிரபல வழக்கறிஞர் அரிமாசுந்தரம் சபாநாயகர் தனபால் சார்பிலும், எடப்பாடி பழனிச்சாமி சார்பில் வவத்தியநாதன் என்ற சீனியர் வழக்கறிஞரும், கவர்னர் சார்பில் ராகேஷ் திவாதி என்பவரும், தமிழக அரசு சார்பில் சுப்பிரமணியம் பிரசாத் என்பவரும் வாதாடுகின்றனர்.

Leave a Reply