இன்னும் சற்று நேரத்தில் 2ஜி வழக்கின் தீர்ப்பு; டெல்லியில் பரபரப்பு
2ஜி வழக்கில் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்க உள்ளதால் பாட்டியாலா நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீதிமன்ர வளாகத்தில் நீதிபதிகளின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி நபர்களுக்கு கோர்ட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தீர்ப்பை கேட்க தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற திமுகவினர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை அடுத்து இன்று காலை ஒன்பது மணிக்கே ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜரானார். அதேபோல் கனிமொழியும் சற்றுமுன்னர் நீதிமன்றத்திற்கு வந்தார்.
டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் சில நிமிடங்களில் நீதிபதி ஓ.பி. ஷைனி தீர்ப்பை அறிவிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.