இன்னும் ஐந்தே நாட்கள்: குளத்திற்கு செல்கிறார் அத்திவரதர்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அத்திவரதர், வரும் 17ஆம் தேதி குளத்திற்கு செல்லவுள்ளதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஆகம விதிப்படி அத்திவரதர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை அல்லது இரவு குளத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்று ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே பக்தர்கள் அத்திவரதரை காணமுடியும் என்பதால் காஞ்சிபுரம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது

Leave a Reply