புதிய நடைமுறை அமல்

ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற கியூஆர் குறியீடுகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

முதல்கட்டமாக வடமேற்கு ரயில்வே நிர்வாகம் புதிய முயற்சியாக முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை மொபைலில் எளிதில் பெற கியூ-ஆர் கோடு முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதன்மூலம் ஜெய்ப்பூர், அஜ்மீர், ஜோத்பூர், பிகானேர், அபு ரோடு, உதய்பூர் நகரம், துர்காபுரா, ஆல்வார், ரேவாரி, சங்கனேர், லல்கர், மற்றும் காந்திநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் பயணிகள் காகிதமில்லாமல் முன்பதிவு செய்யப்படாத மொபைல் டிக்கெட்டுகளைப் பெறலாம்.

முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து யுடிஎஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மொபைலில் பதிவிறக்கம்செய்த பின்னர் , பயனர் ‘பதிவு’ மற்றும் ‘உள்நுழைவு’ செயல்முறையை முடிக்க வேண்டும். . உள்நுழைவை முடித்த பிறகு, ‘புத்தக டிக்கெட்’ மெனுவில் கியூ ஆர் முன்பதிவைத் தேர்ந்தெடுத்து ரயில் நிலையத்தின் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். கியூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ததைத் தொடர்ந்து, டிக்கெட் பெறுவதற்கான மேல் நடவடிக்கையை துவங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply