shadow

இனி தயக்கம் இல்லை: புதிய கட்சியை தொடங்கவுள்ளேன்: நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் கடந்த சில வருடங்களுக்கு முன் ‘அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’ என்ற ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தல் நேரத்தில் மட்டும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவருக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதி ஓட்டுக்கள் கணிசமாக விழுந்தாலும் இவர் இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க கார்த்திக் முடிவுக் செய்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது மரியாதை நிமித்தமாக பல கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம் இருந்ததாகவும், இனி அரசியலில் தமக்கு இருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் புதிய பெயரில் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக இக்கட்சியின் பெயர் மற்றும் நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடயிருப்பதாகவும் கூறினார். எனவே கமல், ரஜினி, விஷாலை அடுத்து இன்னொரு நடிகரின் கட்சி வரும் தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது.

Leave a Reply