இனிமேல் தான் அமித்ஷா ஆட்டம் ஆரம்பம்: என்ன ஆகப்போகுதோ சிவசேனா?

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், சிவசேனா கண்டிப்பாக ஒருசில நிபந்தனைகளுடன் ஆட்சிக்கு ஆதரவு தரும் என பாஜக மேலிடம் நம்பியது.

ஆனால் திடீரென இன்று சிவசேனாவின் மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் பதவி விலகியதால், பாஜகவுடன் அந்த கட்சி கூட்டணியை முறித்து கொள்ள முடிவு செய்துள்ளது

இந்த நிலையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இத்தனை நாள் பொறுமையாக இருந்த அமித்ஷா இன்று விஸ்வரூபம் எடுப்பார் என்றும், சிவசேனாவை உடைத்து அந்த கட்சியின் எம்.எல்.ஏக்களை பெருமளவில் இழுக்க வாய்ப்பு இருப்பதாகவும், இனிமேல் தான் அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம் ஆகும் என்பதால் சிவசேனாவின் நிலைமை என்ன ஆகுமோ என்றும் மகாராஷ்டிரா வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply