இனிமேல் ‘எஸ் சார்’ ‘எஸ் மேடம்’ கிடையாது: ஜெய்ஹிந்த்
பள்ளி வகுப்பறையில் தினந்தோறும் வருகைப்பதிவில் உள்ள மாணவர்களின் பெயர்களை ஆசிரியரே ஆசிரியையோ படிக்கும்போது உள்ளேன் ஐயா’, ‘எஸ் சார்’, எஸ் மேடம்’ என்றுதான் மாணவர்கள் கூறி வந்தனர். இனிமேல் அதற்கு பதிலாக ஜெய்ஹிந்த்’ என்று கூற வேண்டும் என மத்தியபிரதேச கல்வி அமைச்சர் விஜய்ஷா கூறியுள்ளார்.
இந்த நடைமுறை அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் அக்டோபர் 1 முதல் அமல்படுத்த வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இதனை பின்பற்றுவது அந்தந்த பள்ளி நிர்வாகிகளின் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
பள்ளி ஆசிரியர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் விஜய்ஷா இதனை கூறியதோடு மாணவர்கள் தினசரி தேசியகீதம் பாட வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவித்தார்.இதன்மூலம் மாணவர் பருவத்தில் தேசியப்பற்று அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.