இந்த பாவம் உங்களை சும்மா விடாது: முதல்வருக்கு விவேக் எச்சரிக்கை
தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான 13 பேர்களின் பாவம் உங்களை சும்மா விடாது என்று ஜெயா டிவியின் விவேக் ஜெயராமன் தமிழக முதல்வர் எடப்பாடியை பழனிச்சாமியை விமர்சனம் செய்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
விவேக் ஜெயராமன் தனது டுவிட்டரில் நீங்கள் செய்த துரோகத்தைக் கூட மன்னிக்கலாம். ஆனால், சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற உங்களின் பாவத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது” என்று கண்டித்துள்ளார்.
இந்த டுவீட்டை டுவிட்டர் பயனாளிகள் ஒருவர் கூட விமர்சிக்கவில்லை என்பதும், அதற்கு மாறாக, அனைவரும் அதை வரவேற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீங்கள் செய்த துரோகத்தைக்கூட மன்னிக்கலாம். ஆனால், சொந்த மக்களையே சுட்டுக் கொன்ற உங்களின் பாவத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.#CloseSterlite#StopViolence
— Vivek Jayaraman (@vivekjayarman) May 24, 2018
Leave a Reply
You must be logged in to post a comment.