பிரதமர் மோடி பெருமிதம்

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நன்னாள் பல யுகங்களுக்கு நிலைத்திருக்கும் என பிரதமர் மோடி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியவுடன் தெரிவித்தார்

தமிழில் கம்பராமாயணம் ராமரின் புகழை பறைசாற்றுகிறது என்று கூறிய பிரதமர் மோடி, ராம ராஜ்ஜியத்தில் வேறுபாடுகள் இல்லை, ஏழ்மை இல்லை என்றும் கூறினார்

அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சியை உருவாக்குவோம், அது சுயசார்பு பாரதமாக அமையும் என்றும், நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள ஆன்மிக தலைவர்களுக்கு எனது வணக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் ராம மயமாக இருக்கிறது என்றும், இப்படி ஒரு நன்னாள் வந்ததை பலராலும் தற்போது வரை நம்ப முடியவில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்

Leave a Reply