இந்து மதத்தை கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லையா? திருமாவளவன்
இந்து மதத்தைச் சேர்ந்த எனக்கு அந்த மதம் சார்ந்த கேள்வி கேட்க உரிமை இல்லையா? என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் இந்து மதக் கோயில் கோபுரம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய திருமாவளவனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தற்போது அவர் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
இந்து மதம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். கோவில்களில் தாம்பத்ய உறவுகளை காட்டும் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. தேவாலயங்கள் மசூதிகள் தாம்பத்திய உறவை காட்டும் சிற்பங்கள் உள்ளனவா?
அசிங்கமான படங்களை வீட்டின் வரவேற்பு அறையில் யாரும் வைக்கமாட்டார்கள். இந்து மதத்தைச் சேர்ந்த எனக்கு அந்த மதம் சார்ந்து கேள்வி கேட்க உரிமை இல்லையா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.