shadow

இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்டுங்கள்: மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கடந்த நான்கரை ஆண்டுகால பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்கள் உள்பட பல பாஜக பிரபலங்கல் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே. ஆட்சி முடிவடையும் நிலையிலும், தேர்தலை சந்திக்கவுள்ள நிலையிலும் பாஜகவினர்களின் சர்ச்சை பேச்சு ஓயவில்லை

அந்த வகையில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து பெண்களை தொட்டால் அவர்களின் கையை வெட்டி எறியுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்த பெண்கள் ஒளிந்து கொண்டிருப்பதாகவும், . அத்தகைய தேச துரோகிகளுக்கு இங்கு இடம் தரக் கூடாது என்றும், அவர்களை மண்ணோடு மண்ணாக்க வேண்டும் என்றும் அனந்தகுமார் பேசியுள்ளார்.

ஏற்கனவே அமைச்சர் அனந்தகுமார் தாஜ்மஹாலை கட்டியது முஸ்லிம்கள் அல்ல என்றும், எதிர்க்கட்சி தலைவர்களை காக்கைகள், குரங்குகள், நரிகள் என்றும் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply